Thursday, 2 June 2016

என் அன்பு ...

உன்னை  தனிமையில்  தவிக்க விடவில்லை..
             நான்  தனியாக   தவிக்கின்றேன் ...
தனிமையும்  சுகம்தானே ...
             உன்  நினைவுகளுடன்  இருக்கையில் ...

தாலாட்டு  பாட  தாயும்  அல்ல..
            தாங்கிப்பிடிக்க  தந்தையும்  அல்ல..
அணைத்துக்கொள்ள  அக்காவும்  அல்ல ..
           அறிவுரைச்சொல்ல  அண்ணனும்  அல்ல..

உன்  உறவென்று கூறி ..
           என்  உறவை  முடித்துக்கொள்ள  விரும்பவில்லை...

நான்  காற்றுப்போல  இருப்பேன் ...
           காலம்  முழுதும்  நீ  சுவாசிக்க ...



 

No comments:

Post a Comment